புதிய கொரோனா வலயமாக கொழும்பு கப்பல் தளம் மாறி வருவதையடுத்து அங்கு மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தென் அதிவேக வழித்தடத்தில் கொழும்பில் இருந்து மத்துகமவிற்கு பயணித்த சொகுசுப் பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த சொகுசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்ட பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவராக கொழும்பு கப்பல் தளத்தில் பணியாற்றும் நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த தொற்றாளர் பணியாற்றும் கொழும்பு கப்பல் தளத்தில் பணியாற்றுபவர்கள் இனம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய நிலையில் கொழும்பு கப்பல் தளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு